Posts

Showing posts from November, 2023

தோழர் CSP சிறந்த மதியூகி!

          -  K.ராகவேந்திரன்           முன்னாள் மாபொதுச்செயலர் - NFPE தோழர் CSP குறித்து நிறைய நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். அவரது நூற்றாண்டு தொடக்கம் ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்.  முதலில் தோழர் CSP ஒரு சிறந்த மதியூகி என்பதை நான் அறிந்து கொண்ட ஒரு நிகழ்வின் மூலம் கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.  நான் முதன் முதல் ஒரு பார்வையாளனாகக் (observer) கலந்து கொண்ட அஞ்சல் மூன்று மாநில மாநாடு அது. தோழர் A.பிரேமநாதன் தலைவராகச் செயல்பட்டதும், தோழர் A.S.ராகவன் மாநிலச் செயலராகச் செயல்பட்டதும் அந்த மாநில மாநாட்டில் தான். உள்நாட்டு அவசரநிலை திருமதி இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டு பல்வேறு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காலம் அது.  1976 என்று கருதுகிறேன். பிளவுபட்டிருந்த NFPTE சம்மேளனத்தில் ஒற்றுமை உருவாக்கப்பட்டிருந்த காலம். அதேசமயம் சம்மேளன இயக்கத்தில் புதிய சிக்கல் நிலவிய காலம். சேலத்தில் மாநில மாநாட்டைக் கூட்டியிருந்தார்கள்.  தோழர் CSP ஒரு பிரதிநிதியாக வேலூர் கோட்டத்தில் இருந்து கலந்து கொ...

சி.எஸ்.பி – ஒரு நூற்றாண்டுத் தொழிற்சங்க வரலாற்று நாயகர்

November 11, 2023 Bank Workers Unity கமலாலயன்  அமரர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. அவரைப் பற்றிய என் நினைவுகளைத் தொகுத்துக் கொண்டு மனதளவில் அவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.1975-ஆம் ஆண்டில்,நாடு பூராவிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலை. தொழிற்சங்க உரிமைகள், அரசியல், ஜனநாயக உரிமைகள் மட்டுமன்றி, மனிதர்கள் உயிருடன் வாழம் உரிமை கூட ரத்து செய்யப்பட்டிருந்த ஒரு மோசமான சூழல். நான் அந்த நேரத்தில் காட்பாடி நகர் விரிவில், காங்கேயநல்லூர் என்டிடிஎப் தொழிற்சாலையில் டூல் மேக்கர் பணியில் இருந்தேன். நானும், என்னுடன் பயிற்சியிலிருந்த 3 பேரும் காங்கேயநல்லூருக்குள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். நாங்களே சமையல் செய்து கொண்டோம். நான் என் சக தொழிற்சாலை நண்பர் முத்துக்குமாருடன் அடிக்கடி இலக்கியம் பற்றி விவாதிப்பது வழக்கம். தமுஎச அமைப்புக் கூட்டத்தில் சிஎஸ்பி அந்தக் கால கட்டத்தில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (இப்போது த.மு.எ.க.ச.) மதுரையில் தொடங்கப்பட்டது. செம்மலரிலும், தீக்கதிரிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த முக்கியமான மூத்த, இளைய படைப்பாளிகள் ...

குடும்பம், வேலை, இயக்கம் மூன்றிலும் கவனம்

ஏழு வயது இருக்கும் போது எனக்கு primary complex என்னும் சிறுவயதில் வரும் காச நோய். அப்போது ஆரணியில் இருந்தோம். சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அப்பா வேலூர் சி.எம்.சி மருத்துவ மனைக்கு அருகில், ஜட்கா ஸ்டாண்டு எதிரில் இருக்கும் ஃபோர்ட் போஸ்ட் ஆபீஸுக்கு மாறுதல் பெற்றுக் கொண்டு வந்தார். காலையில் ஆறரை மணிக்கு தந்தி வேலை (telegraph turn duty). போகும்போதே என்னையும் சைக்கிளில் உடன் அழைத்து செல்வார். எட்டு மணியளவில் ஒரு மணி நேரம் இடை வெளி. என்னை மருத்துவ மனையின் இரண்டாவது தளத்திலிருக்கும் சிகிச்சை அறைக்கு தோளில் சுமந்து சென்று பரிசோதனை மற்றும் நெஞ்சக கபத்தை வெளியேற்றுவது அல்லது ஊசி போடுவது போன்ற சிகிச்சைக்கு பிறகு வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு மீண்டும் பணிக்கு செல்வார். பல மாதங்கள் இது தொடர்ந்தது. குடும்பம், வேலை, இயக்கம் மூன்றிலும் கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். ஒன்றைக் காட்டி இன்னொன்றை கவனிக்காமல் இருப்பது நம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் என்று வாழ்நாளில் எல்லா கட்டத்திலும் நடைமுறைப் படுத்திக் கொண்டே மற்றவர்களுக்கும் வலியுறுத்துவார்.  இன்று என்னுடைய எழுபத்து நான்காவத...

நீங்கா நினைவில் தோழர் சி.எஸ்.பி.

- D. சிவகுருநாதன், அஞ்சல் ஆர் எம் எஸ் கேஷுவல் மற்றும் கான்ட்ரேக்ட் ஊழியர் சங்க மாநில தலைவர். மார்க்சீயம் கற்பித்த மாமனிதர் சி.எஸ்.பி. என்கிற சி.எஸ். பஞ்சாபகேசன் - ஆசிரியர் - ஸ்தாபகர் - உழைக்கும் வர்க்கம் மாத இதழ் அவர்களின் நூற்றாண்டையொட்டி நினைவுகளை பகிர்வது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.  தோழர் C.S.P.ஐ பற்றி பல்வேறு கோணங்களில் எழுதவும் பேசவும் தற்போதுள்ள தலைவர்கள் பலரும் நினைவில் கொள்ளும் வகையில் அஞ்சல் துறையில் மிகப் பெரிய தலைவராக திகழ்ந்த சி.எஸ்.பி. அவர்களை வேலூர் நகரத்தில் பலமுறை நான் சந்தித்திருந்தாலும் - முதல் முதலாக அவரது அறிமுகம் தோழர்  BVS என்கிற B.V.சுப்ரமணியம்  அவர்களோடு பூங்கா நகர் அஞ்சலகத்தில் நிகழ்ந்ததை என்றும் என்னால் மறக்க இயலாது. NFPTE வட சென்னை அஞ்சல் 3 சங்கத்தின் சார்பாக “சுதந்திர போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு” என்ற அற்புதமான உரைவீச்சு தோழர் சி.எஸ்.பி. அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்தவர் தோழர் BVS. காங்கிரஸ் கருத்தோட்டம் உள்ள அரசியல் நிலைபாட்டில் இருந்த எனக்கு காந்தி தாத்தா வந்தார் -  நமக்கு  சுதந்திரம் வாங்கி தந்தார் என்ற...

சங்கிகளின் பிடியில் சிக்கியிருப்பேன்.

அப்போது நாங்கள் வேலூர் ஓல்டு டவுன் தோல் கிடங்கு தெருவில் குடியிருந்தோம். அருகிலிருந்த உத்திர மாதா கோயில் தெருவின் வழியாக சிறிது தூரம் சென்று இடது புறம் திரும்பினால் கானாறு. அதன் மீதான சிமெண்ட் ஸ்லாப்பை கடந்து சென்றால் சுப்ரமணிய சாமி கோவிலின் பின்புறம் பெரிய காலி மனை இருக்கும். கோவிலுக்கு சொந்தமானது. அங்குதான் அந்த பகுதியின் சிறுவர்கள் விளையாடுவோம். ஒருநாள் சைக்கிள் கடை ஓனரின் மகனும் கடையில் வேலை செய்யும் ஆறுமுகமும் காலி மனையின் மைய இடத்தை சுத்தம் செய்து வட்ட வடிவமாக கோடு போட்டு மையத்தில் காவி கலர் கொடியை நட்டார்கள். வேட்டியை அவிழ்த்து உள்ளே அணிந்திருந்த காக்கி அரை டவுசருக்குள் வெள்ளை சட்டையை நுழைத்து விட்டு கொடிக்கு அருகில் வந்து மார்புக்கு இணையாக கையை மடித்து "நமஸ்தே சதவத்சலே மாத்ரு பூமி" என்று பாடினார்கள். பிறகு சிறுவர்களாகிய எங்களை அழைத்து கம்பு (தண்டா) சுற்ற கற்றுத் தருகிறோம் என்று அழைத்தார்கள் நாங்களும் மகிழ்ச்சியுடன் கம்பு சுற்றினோம். பிறகு வட்டமாக அமர வைத்து தினமும் விளையாடுவதற்கு 'ஷாகா'வுக்கு வாங்கன்னு சொன்னார்கள்.  இறுதியாக ஜண்டாவுக்கு வணக்கம் செய்ய கற்று தந்...

போலீஸ் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறை

அப்பா வேலூர் கோட்டைக்குள் இருந்த கலக்டரேட் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் அவருக்கு வீட்டிலிருந்து மாலை சிற்றுண்டி அண்ணனோ நானோ எடுத்து செல்வோம். அப்போது கோட்டைக்குள் போலீஸ் பயிற்சி கல்லூரி இருந்தது. ஜலகண்டேஸ்வரர் (சிலை நிறுவப்படாத)  கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் போலீஸ் பயிற்சி மாணவர்களுக்கு வீர நடை, லத்தி சுழற்றுதல் போன்ற வகுப்புகள் நடை பெறும். சிறிது நேரம் நின்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்பா சிற்றுண்டி சாப்பிட்டதும் காலி பாத்திரங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவோம்‌.  ஒரு நாள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே  "போலீஸ் பயிற்சியில் இன்று என்ன பார்த்தாய்?" என்று  அப்பா கேட்டார்.  "லத்தி சார்ஜ்" என்றேன்.  "என்ன கருத்தை பதிய வைத்தார்கள்?" அடுத்த கேள்வி. "அத்தனை ஊன்றி பார்க்கவில்லையே" என்று முழித்தேன். "போய் மீண்டும் பார்த்து விட்டு வா" என்றார். போலீஸ் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களாகவும் மீதி பிரிவினர் லத்தி சார்ஜ் செய்வதாகவும் பயிற்...

தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு

 அப்பா போஸ்ட் மாஸ்டர். ஓரிரு ஆண்டுகள் மட்டுமே தபால் அலுவலகமும் வசிப்பிடமும் இணைந்திருந்த வீட்டில் குடியிருந்தோம். எப்போது அஞ்சல் அலுவலகத்தை பார்த்தாலும் எங்களுடைய வீடு போல எனக்கு தோன்றும்.  ஆனால் அதற்கு பின் நாங்கள் எத்தனையோ வீடுகளில் குடியிருந்தோம். அவையெல்லாம் எனக்கு வீடுகளாக தெரியவில்லை மார்க்சிய பள்ளியாகவே தெரிந்தன. காரணம்  365 நாட்களும் எந்த நேரத்திலும் வீட்டில் ஏதாவது ஒரு துறையைச் சேர்ந்த தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தை அறிமுகப்படுத்துவது, விளக்குவது தான் நடந்து கொண்டிருக்கும். அவருடைய வாழ்நாள் இறுதிவரை இப்படித்தான்..  எங்கள் தந்தை தோழர்  சி எஸ் பஞ்சாபகேசனின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது. 10,10,1924 - 31-05-1996