கம்யூனிஸ்ட் அறிக்கை அறிமுகம்
பதிவு - 14 இன்னும் பதினைந்து வயது முடியவில்லை. 1964ல் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.யூ.சியில் சேர்ந்தாச்சு. நேரு மறைந்துவிட்டார். லால்பகதூர் பிரதமர். கல்லூரி தொடங்கிய சில மாதங்களிலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கிவிட்டது. இந்தி திணிப்பை எதிர்ப்பது என்கிற முடிவில் போராட்டத்தில் வேகமாக இறங்கி விட்டேன். ஆனாலும் போராட்டத்தின் போக்கிலும், அரசியலிலும் எனக்கு குழப்பம் இருந்தது. நண்பர்களோடு மொழியைப் பற்றி பேசும்போது அரசியலும் பேச வேண்டியிருந்தது. அடிப்படையாக பேச வேண்டியதை தெளிவாக பேச அது வரை தெரிந்தவை போதவில்லை. அப்பாவிடம் எத்தனையோ கேள்விகளை கேட்டிருக்கிறேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எளிமையாக பதில் கூறுவார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தருவதால் (DA - பஞ்சப்படியைத்தான் தினத்தந்தி அப்படி கூறுகிறது) விலை உயர்ந்து விடுமாமே? இது என் கேள்வி. ஏற்கனவே விலை உயர்ந்ததனால் வாங்க முடியாமல் போன பொருள்களை வாங்கிக் கொள்ள தரப்படும் பஞ்சப்படியால் எப்படி விலை ஏறும்? கேள்வியாக அப்பாவின் பதில். என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் பரவியிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர் மெ...